பிரித்தானியாவில் கொரோனாவிற்கு மேலும் ஒரு தமிழ் பெண் பலி!

You are currently viewing பிரித்தானியாவில் கொரோனாவிற்கு மேலும் ஒரு தமிழ் பெண் பலி!


யாழ்ப்பாணம் பலாலியை பிறப்பிடமாகக் கொண்ட பெண் ஒருவர் பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இன்று (26.04.2020) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

அகஸ்ரின் தங்கராணி என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிரித்தானியாவில் குடும்பத்தாருடன் வசித்துவந்த அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

இங்கிலாந்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இலங்கையர்கள் 25 பேர் உயிரிழந்ததாக உயர்ஸ்தானிகர் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(எரிமலையின் செய்திப் பிரிவு)

பிரித்தானியாவில் கொரோனாவிற்கு மேலும் ஒரு தமிழ் பெண் பலி! 1
பகிர்ந்துகொள்ள