பிருத்தானியாவில் கொரோனா : போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்!

  • Post author:
You are currently viewing பிருத்தானியாவில் கொரோனா : போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்!

மார்ச் 27 அன்று, பிருத்தானியாவின் பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இன்று திங்கள் இரவு, அவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

பிருத்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் நிலை இன்று பிற்பகலில் மோசமடைந்துள்ளது . திங்கள்கிழமை இரவு அவர் லண்டனில் உள்ள St. Thomas’s மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

ஞாயிறு இரவு, ஜான்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த மருத்துவமனை அனுமதியானது அவசர நடவடிக்கைக்கு பதிலாக ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று விவரிக்கப்பட்டது, மேலும் Sky News கருத்துப்படி பிரதமர், தொடர்ந்து அரசாங்கத்தை வழிநடத்துவார்.

மேலதிக தகவல்: VG

பகிர்ந்துகொள்ள