பிரேசிலில் கொரோனா: வைரஸ் தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 674 பேர் பலி!

  • Post author:
You are currently viewing பிரேசிலில் கொரோனா:  வைரஸ் தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 674 பேர் பலி!

கொரோனா வைரசால் தென் அமெரிக்க நாடான பிரேசிலும் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகிறது. அங்கு நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பிரேசிலில் புதிதாக 7,177 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 262,545 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 674 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 17,509 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை 100,459 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பிருத்தானியாவை பின் தள்ளி பிரேசில் தற்போது நான்காவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் ஸ்பெயினும், மூன்றாவது இடத்தில் ரஷ்யாவும் உள்ளன.

பகிர்ந்துகொள்ள