புதுக்குடியிருப்பில் வாள்வெட்டு குழுவினை செர்ந்த 5 பேர் கைது!

You are currently viewing புதுக்குடியிருப்பில் வாள்வெட்டு குழுவினை செர்ந்த 5 பேர் கைது!

புதுக்குடியிருப்பு குரவில் பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேரை புதுக்குடியிரப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.


குரவில் பகுதியில் நேற்று இரவு இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் வாள்வெட்டாக மாறியுள்ளது இதன்பொது 45 அகவையுடைய வீரையா ரவிச்சந்திரன் என்பவரின் உள்ளங்கை பகுதி துண்டாடப்பட்டுள்ள நிலையில் மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்கா கொழும்பிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் 12.09.2020 இன்று காலை குரவில் பகுதியில் வாள்வெட்டுடன் தொடர்புடைய 5 இளைஞர்களை புதுக்குடியிருப்ப பொலீசார் கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடம் இருந்து வாள்ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது கைதானவர்கள் தடுத்துவைத்து விசாரணை செய்துவருகின்றார்கள்.
இவர்களை நாளை13.09.2020 நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

பகிர்ந்துகொள்ள