புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் கோர விபத்தில் சிக்கிய இளைஞன் பலி!

You are currently viewing புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் கோர விபத்தில் சிக்கிய இளைஞன் பலி!

இந்த விபத்து சம்பவம் நேற்று (25) இரவு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் நெல்லு வெட்டும் இயந்திரத்தினை ஏற்றிவந்த உழவு இயந்திரமும் சிறியரக பட்டா ரக வாகனமும் மோதியே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தில் பட்டா வாகனத்தில் பயணித்த சுதந்திரபுரம் பகுதியினை சேர்ந்த  நவீன் என்ற இளைஞன் படுகாயம் அடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளை உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் உழவு இயந்திரத்தின் சாரதியையும் கைது செய்துள்ளனர்.

மேலும் விபத்திற்குள்ளான இரண்டு வாகனங்களையும் காவல்துறையினர் புதுக்குடியிருப்பு காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார்கள்.

சம்பவம் தொடர்பில் சிறீலங்கா காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments