பெரியவிளான் பகுதியில் கம்பியால் தாக்கி 29 வயதுடைய இளைஞரொருவர் படுகொலை!

You are currently viewing பெரியவிளான் பகுதியில் கம்பியால் தாக்கி 29 வயதுடைய இளைஞரொருவர் படுகொலை!

யாழ்.இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் கம்பியால் தாக்கி 29 வயதுடைய இளைஞரொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்றைய தினம் (26) வீதியில் சென்று கொண்டிருந்த வேளை போதையில் வந்த அதே பகுதியை சேர்ந்த இருவர் அவருடன் முரண்பட்ட நிலையில் முரண்பாடு கைகலப்பாக மாறி குறித்த நபரை கம்பியால் தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த நபர் அயலில் உள்ளவர்கள் மூலம் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நிரோஜன் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த படுகொலை குறித்து இருவர் இன்றையதினம் இளவாலை சிறீலங்கா காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனும் 20 வயதுடைய இளைஞருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம்  தொடர்பில் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments