பேரறிவாளன் 30 நாள் பரோலில் சற்று முன்னதாக விடுவிப்பு!

You are currently viewing பேரறிவாளன் 30 நாள் பரோலில் சற்று முன்னதாக விடுவிப்பு!

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் கடந்த 30 ஆண்டுகளாக சிறையிலடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு அமைவாக 30 நாள் பரோலில் சற்று முன்னதாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளனை பரோலில் விடுவிக்குமாறு அவரது தாயார் அற்புதம்மாள் விடுத்து கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரறிவாளனை 30 நாள் பரோலில் விடுவிக்க சில நாட்களுக்கு முன்னதாக உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இன்று புழல் சிறையில் இருந்த பேரறிவாளனை 30 நாள் பரோலில் பொலிசார் விடுவித்தனர்.

இதையடுத்து புழல் சிறையில் இருந்து ஜோலார்பேட்டை இல்லத்திற்கு பலத்த பாதுகாப்புடன் பேரறிவாளன் அழைத்து செல்லப்படுகிறார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments