மடு பகுதியில் இடியன் வெடித்து இளைஞன் பலி!

You are currently viewing மடு பகுதியில் இடியன் வெடித்து இளைஞன் பலி!

மன்னார் -மடு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 32 வயதுடைய ஏகாம்பரம் சுகிர்தன் (சின்னா) என்ற 32 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்.மன்னார் – தட்சணாமருதமடு பகுதியிலேயே நேற்றுமுன்தினம் இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தட்சணாமருதமடுவை அண்மித்த காட்டுப்பகுதிக்கு வேட்டைக்கு செல்வதற்காக நான்கு இளைஞர்கள் தயாராகி நாட்டு துப்பாக்கியுடன் (இடியன்) ஊருக்குள் நண்பர் ஒருவரை அழைக்க சென்றிருக்கின்றனர். அந்த நேரத்தில் வேட்டைக்கு செல்ல தயாரான நான்கு பேரில் இருவருக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் மற்றொருவருக்கு இடியன் கைப்பிடியால் அடிக்க முற்பட்ட போது தவறுதலாக வெடித்ததில் இடியனை வைத்திருந்த சின்னா என்ற இளைஞன் காயமடைந்துள்ளார்.

பெரியபண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து நோயாளர்காவு வண்டி ஊடக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் குறித்த இளைஞன் உயிரிழந்ததாக ஊர் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments