மட்டக்களப்பில் இளம் குடும்ப பெண் உடலமாக மீட்பு!

You are currently viewing மட்டக்களப்பில் இளம் குடும்ப பெண் உடலமாக மீட்பு!

திருமணமாகி 3 மாதங்களில் இளம் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மட்டக்களப்பு- ஏறாவூர் கொம்மாதுறை கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. 

அதே கிராமத்தைச் சேர்ந்த, தாமோதரம் தனூஜா (வயது 22) என்பவரின் சடலமே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த இளம் பெண் திருமணமாகி மூன்று மாதங்களேயாவதாக அவரது உறவினர்கள் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

மேலும், கணவன் மதுபோதைக்குட்பட்டவர் என்றும் ஆகையினால் தம்பதியினருக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும், 

இதனால் இவ்வாறு நேர்ந்திருக்கலாமென உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அத்தோடு, நண்பர்களையும் அழைத்து வந்து வீட்டில் வைத்தே, கு

றித்த பெண்ணின் கணவர் மதுபோதையில் மூழ்கிக் கிடப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பகிர்ந்துகொள்ள