மட்டக்களப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 128 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

You are currently viewing மட்டக்களப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 128 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 128 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் இனங்காணப்பட்ட அதிகளவான கொரனா தொற்றாளர்கள் இதுவெனவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்தார்.

காத்தான்குடி பொலிஸ் நிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 32 பொலிஸாருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து பொலிஸ் நிலையம் தற்காலிமாக மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

வவுணதீவு பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 14 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் ஆடைத்தொழிற்சாலையொன்றில் கடமையாற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments