மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

You are currently viewing மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், காணாமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுத்தரக் கோரியும் மட்டக்களப்பில் இன்று கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று நடைபெற்ற குறித்தப் போராட்டத்தில், அம்மாவட்டத்தில் உள்ள பெண்கள், காணாமலாக்கப்பட்டவர்களின் அமைப்புகள் இணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும், மீண்டும் மீண்டும் விடுதலைக்கான போராட்டமா? அரசியல் கைதிகளின் குடும்பங்களின் கண்ணீரை நிறுத்து, அரசே, சர்வதேசமே பாதிக்கப்பட்டப் பெண்களின் அவலக்குரல் கேட்கவில்லையா?, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பதில் கூறுவது யார்? உள்ளிட்ட வாசகங்களடங்கிய பதாதைகளையும் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்! 1
மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்! 2
பகிர்ந்துகொள்ள