மட்டக்களப்பில் தொடரும் தமிழ்ப் பண்ணையாளர்களின் போராட்டம்!

You are currently viewing மட்டக்களப்பில் தொடரும் தமிழ்ப் பண்ணையாளர்களின் போராட்டம்!

மட்டக்களப்பில் தமிழ்ப் பண்ணையாளர் களின் கால் நடைகளின் பெரும் மேச்சல்த்தறை அமைந்துள்ள எல்லைக் கிராமங்களான மயிலந்தமடு, மற்றும் மாதவனை பகுதிகளை அடாத்தாக ஆக்கிரமித்து சேனைப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வரும் சிங்கள பெரும்பான்மை இனத்தவர்களை அங்கிருந்து வெளியேற்றி தமது மேச்சல்த் தறைகளை மீட்டுத் தருமாறு கோரி

அப்பகுதி தமிழ்ப் பண்ணையாளர்களால் சித்தாண்டி பிரதான சாலையோரம் கொட்டகை அமைத்து  முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான போராட்டம் இன்று (25.09.2023) திங்கட்கிழமை 11,வது நாளாகவும் கடும் வெய்யில்,மழைக்கு மத்தியிலும் பெரும் சிரமங்களுக்கு மத்தியிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு
வருகிறது.

போராட்ட இடத்திற்கு இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம்- சாணக்கியன் சென்று பண்ணையாளர்களு டன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதுடன் போராட்டத்திலும் கலந்து கொண்டுள்ளார்.
மட்டக்களப்பில் தொடரும் தமிழ்ப் பண்ணையாளர்களின் போராட்டம்! 1

மட்டக்களப்பில் தொடரும் தமிழ்ப் பண்ணையாளர்களின் போராட்டம்! 2

மட்டக்களப்பில் தொடரும் தமிழ்ப் பண்ணையாளர்களின் போராட்டம்! 3

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments