மட்டக்களப்பில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

You are currently viewing மட்டக்களப்பில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு காத்தான்குடி சிறீலங்கா காவற்துறை பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் உள்ள நீர்நிலைப்பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 26 ஆம் திகதி தனது வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் காணாமல்போனமை தொடர்பில் காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றின் உரிமையாளர் அந்த பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதை கண்டு தெரியப்படுத்தியதையடுத்து சடலத்தினை உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

கிரான்குளம்,ஆலயடி வீதியை சேர்ந்த 72 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயாரான கந்தப் பெண் பிள்ளையம்மா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு நீதிமன்ற பதில் நீதவானின் உத்தரவுக்கு அமைவாக சம்பவ இடத்துக்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்ட பின்னர் உடற்கூறு பரிசோதனைக்கு பிறகு சடலத்தை நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கும் படி சிறீலங்கா காவற்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை காத்தான்குடி சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments