மண்டைதீவு சிறீலங்கா காவற்துறை காவலரண் மீது பெற்றோல் குண்டு வீச்சு! – இருவர் கைது.

You are currently viewing மண்டைதீவு சிறீலங்கா காவற்துறை காவலரண் மீது பெற்றோல் குண்டு வீச்சு! – இருவர் கைது.

யாழ்ப்பாணம் – மண்டைதீவு சிறீலங்கா காவற்துறை காவலரண் மீது இரு நபர்களால் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் மேற்கொண்ட இருவரும் தப்பிச் செல்ல முயன்ற போது பொலிஸார் துரத்தி சென்று அவர்களை கைது செய்து சிறீலங்கா காவற்துறை நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரியவந்துள்ளது.

மண்டைதீவு மற்றும் ஊர்காவற்துறையை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் யாழ்ப்பாணத்தையும் , தீவகத்தையும் இணைக்கும், மண்டைதீவு சந்தியில் சிறீலங்கா காவற்துறை காவலரண் காணப்படுவதனால் தீவக பகுதிகளில் இருந்து சட்டவிரோத இறைச்சிகள், போதைப் பொருட்கள் என்பவற்றை யாழ்ப்பாணத்திற்கு கடத்தப்படுவது பெருமளவில் கட்டுப்படுத்தப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments