மன்னாரிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவியவருக்கு நேர்ந்த கதி!

You are currently viewing மன்னாரிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவியவருக்கு நேர்ந்த கதி!

இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக படகு ஊடாக தமிழகத்துக்குள் ஊடுருவிய இலங்கையர் ஒருவரை இராமேஸ்வரம் மெரைன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பிரதீப் குமார் பண்டாரநாயக்க (வயது30) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக படகு ஊடாக தமிழகத்துக்குள் சிலர் ஊடுருவி உள்ளதாக இராமேஸ்வரம் மெரைன் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த இரகசிய தகவலுக்கமைய தனுஸ்கோடி கடற்கரை ஓரத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு, ரோந்து பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, கம்பி பாடு கடற்கரையில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரை கைது செய்து, பொலிஸார் விசாரணை செய்தபோது, அவர் இலங்கையர் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் பிடிப்பட்டவர் சிங்களம் பேசுவதால் இவர் குறித்து மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணையை முன்னெடுத்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன…..see more

பகிர்ந்துகொள்ள