மன்னாரில் இரு கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!

You are currently viewing மன்னாரில் இரு கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!

மன்னார் மாவட்டத்தின் பட்டித்தோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய கிராமங்கள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ள கிராமங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

வெளி மாவட்டத்திலிருந்து கட்டிட வேலைக்காக மன்னார் பட்டித்தோட்டப் பகுதிக்கு வந்திருந்த நபர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை கடந்த 8 ஆம் திகதி இனங்காணப்பட்டதையடுத்து குறித்த பகுதியிலுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந் நிலையிலேயே இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது

பகிர்ந்துகொள்ள