மன்னாரில் 13 வயது சிறுமி சடலமாக மீட்பு !

You are currently viewing மன்னாரில் 13 வயது சிறுமி சடலமாக மீட்பு !

 

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, எருக்கலம்பிட்டி 1ஆம் வட்டார பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம், இன்று (12.02.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சிறுமி காணாமல் போன நிலையில் சிறுமியின் பெற்றோர் மன்னார் சிறீலங்கா காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

வவுனியாவில் உள்ள சிறுவர் நிலையம் ஒன்றுக்கு குறித்த சிறுமி சென்றிருந்த நிவையில் பின் நேற்றையதினம் (11.02.2024) அங்கிருந்து அழைத்து வரப்பட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை குறித்து சிறுமி கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் காணப்பட்டதாகவும் சிறீலங்கா காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் சிறுமியின் சடலம் சிறீலங்கா காவற்துறையினரால் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பாக மன்னார் சிறீலங்கா காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments