மன்னார் பள்ளிவாயலில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களிற்கு பிரார்த்தனைகள்!

You are currently viewing மன்னார் பள்ளிவாயலில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களிற்கு பிரார்த்தனைகள்!

கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு அன்று இடம் பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கு உயிரிழந்த மக்களை நினைவு கூறும் வகையில் இன்று மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து கோயில், கத்தோலிக்க தேவாலயம், மற்றும் பள்ளி வாசல்களில் விசேட பிரார்த்தனைகள் இடம் பெற்றது.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணிக்கு வீடுகளில் உயிரிழந்த மக்களுக்காக இரண்டு நிமிட அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைவாக வீடுகளில் மௌ அஞ்சலி செலுத்தப்பட்டது. இதே வேளை மன்னார் மூர்வீதி ஜூம்மா பள்ளிவாயலில் விசேட ‘தூ ஆ’ பிரார்த்தனை இடம் பெற்றது.

மன்னார் பள்ளிவாயலில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களிற்கு பிரார்த்தனைகள்! 1

பகிர்ந்துகொள்ள