மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழப்பு!

You are currently viewing மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழப்பு!

வவுனியா(Vavuniya), மதுரா நகர் பகுதியில் தாக்குதலுக்கு இலக்கான நபரெருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (06.05.2024) மாலை இடம்பெற்றுள்ளதாக சிறீலங்கா பொலிஸார் கூறியுள்ளனர்.

இச்சம்பவத்தில் மதுராநகர் பகுதியைச் சேர்ந்த  மோகன்(45) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மதுரா நகர் பகுதியில் வசிக்கும் உயிரிழந்த நபரின் மருமகனே தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா, மதுராநகர் பகுதியில் வசிக்கும் குறித்த இருவருக்கும் இடையில் நீண்ட நாட்களாக கருத்து முரண்பாடுகள் இருந்து வந்துள்ளதாக சிறீலங்கா பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் வெளியில் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய மாமனார் மீதே மருமகன் காேடரியால் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த நபரை, உறவினர்கள் வவுனியா வைத்தியசாகை்கு காெண்டுசெல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் சிதம்பரபுரம் சிறீலங்கா பாெலிஸார் விசாரணைகளை மேற்காெண்டுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments