மாமுனை கடலில் காணமல்போன 15 வயது சிறுவன்!

You are currently viewing மாமுனை கடலில் காணமல்போன 15 வயது சிறுவன்!

கடலில் நீராடச் சென்ற மூவரில் 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம்  மாமுனை பிரதேசத்தில் நேற்று (29) பிற்பகல் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன சிறுவன் நாகர்கோவில் கிழக்கு நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

மற்றுமொரு சிறுவன் நீரில் மூழ்கிய நிலையில் அவர் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன சிறுவனை தேடும் பணியில் சிறீலங்கா காவற்துறையினர் கடற்படையினர் மீனவ மக்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments