மினுவாங்கொடையில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி!

You are currently viewing மினுவாங்கொடையில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி!

மினுவாங்கொடை பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய  கும்பலைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

மினுவாங்கொடை, பொல்வத்த பிரதேசத்தில் இன்று (18) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரி ஒருவர் சிகிச்சைக்காக மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பொத்தல பிரதேசத்தை சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments