முல்லைத்தீவில் அண்மைய நாட்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக, ஆங்காங்கே மின்னல் தாக்கங்கள் பதிவாகியுள்ளன. நேற்று முன்தினம் முள்ளிவாயக்கால் பகுதியில் மின்னல் தாக்கம் பதிவாகியுள்ளது. இதனால் தென்னை மரம் ஒன்று பாதிக்கப்பட்டுள்ளதுடன், வாழ்வாதாரத்தின் நிமித்தம் வளர்க்கப்பட்ட சுமார் 250ற்கும் மேற்பட்ட கோழிக் குஞ்சுகள் இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மின்னல் தாக்கி 250 கோழி குஞ்சுகள் பலி!
