மிருசுவிலில் தமிழ் மக்களை படுகொலை செய்த குற்றவாளியின் விடுதலைக்கு எதிராக மனு தாக்கல்!

You are currently viewing மிருசுவிலில் தமிழ் மக்களை படுகொலை செய்த  குற்றவாளியின் விடுதலைக்கு எதிராக  மனு தாக்கல்!

யாழ்ப்பாணம் மிருசுவிலில் தமிழ் மக்களை சுட்டும், வெட்டியும் படுகொலை செய்த போர்க்குற்றவாளி சுனில் ரத்நாயக்கவுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மன்னிப்பளித்து விடுவித்தமைக்கு எதிராக, கொலையுண்டோர் குடும்பத்தார் சார்பில் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அளித்த மன்னிப்பை மீள் பரிசீலனை செய்யுமாறும் அதனை இரத்து செய்யுமாறும் கோரி இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள