மும்பையில் மழையால் இன்று காலை வீடுகள் இடிந்து விழுந்து 15 பேர் பலி!

You are currently viewing மும்பையில் மழையால் இன்று காலை வீடுகள் இடிந்து விழுந்து 15 பேர் பலி!

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் – மும்பை நகரில் பெய்துவரும் கனமழையின்போது இரு இடங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீடுகள் இடிந்து விழுந்ததில் 15 பேர் உயிரிழந்தனர்.

மும்பை – செம்பூர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து இன்று அதிகாலை 1 மணியளவில் வீடொன்று இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 12 பேர் உயிரிழந்ததாக அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தெரிவித்தனர்.

அத்துடன், விக்ரோலி பகுதியில் வீடு இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்ததாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்தப் பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments