முல்லைத்தீவில் கடலுக்குள் மிதந்த போரின் எச்சம்!

You are currently viewing முல்லைத்தீவில் கடலுக்குள் மிதந்த போரின் எச்சம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் கடற்கரைபகுதியில் மண்ணுள் புதையுண்ட உழவு இயந்திரத்தின் பாகங்கள் சில மீனவர்களால் இனங்காணப்பட்டுள்ளது.

தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் நிலையில் கடற்கரையில் அலையின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது. இந் நிலையில், (08) காலை புதுமாத்தளன் கடற்கரைப்பகுதியில் கடந்த காலத்தில் புதைக்கப்பட்ட அல்லது கடலில் அள்ளுண்டு போன உழவு இயந்திரத்தின் பாங்கள் சில கரையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

உழவு இயந்திரத்தின் பெரிய ரயர்கள் உள்ளிட்ட பாகங்கள் கடற் கரையில் தென்பட்டுள்ளதுடன் இரும்பு துண்டுகளும் இனங்காணப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு போரின் இறுதி நாட்களில் மக்களால் கைவிடப்பட்ட உழவு இயந்திரத்தின் பாகங்களாக இவை இருக்கலாம் என மக்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு சிறீலங்கா காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து முல்லைத்தீவு காவல்துறையினர் குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்டதுடன், உழவு இயந்திரத்தின் பாகங்களை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தோண்டிப்பார்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.   

முல்லைத்தீவில் கடலுக்குள் மிதந்த போரின் எச்சம்! 1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments