முல்லைத்தீவில் பூட்டப்பட்ட வீட்டில் இருந்து அழுகிய நிலையில் சடலம் மீட்பு !

You are currently viewing முல்லைத்தீவில் பூட்டப்பட்ட வீட்டில் இருந்து அழுகிய நிலையில் சடலம் மீட்பு !

முல்லைத்தீவில் பூட்டப்பட்ட வீட்டில் இருந்து அழுகிய நிலையில் சடலம் மீட்பு ! 1

முல்லைத்தீவில் கதவுகள் பூட்டப்பட்ட வீடு ஒன்றுக்குள் தூக்கில் தொங்கியவாறு அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேரங்கண்டல் மங்கை நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (23) காலை சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 28 வயதான உத்தமன் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அயலவர்களால் மல்லாவி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மல்லாவி சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments