முல்லைத்தீவில் மீண்டும் காவல்துறை கெடுபிடி – குடும்பவிபரங்கள் பதிவு, அச்சத்தில் மக்கள்!!

You are currently viewing முல்லைத்தீவில் மீண்டும் காவல்துறை கெடுபிடி – குடும்பவிபரங்கள் பதிவு, அச்சத்தில் மக்கள்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் குடும்ப விபரங்களை பதிவு செய்யும் நடவடிக்கையில் காவல்த்துறையினர் ஈடுபட்டிருருக்கின்றனர்.

1865 ஆன் ஆண்டின் காவல்த்துறை கட்டளைச் சட்டம் 75ஆவது பிரிவின் படி காவல்த்துறையினால் குடும்ப விபரங்கள் திரட்டப்படுகின்றது. இப் பகுதியில் இருப்பவர்கள் அனைவரும் அங்குள்ள காவல்த்துறைபிரிவில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பத்தவர்களோ அல்லது யாராவது வேறு இடத்தில் இருந்து வந்தாலோ அல்லது வெளியே சென்றாலோ காவல்த்துறையில் பதிவு செய்து கொள்ள வேண்டும். கடந்த வெள்ளிக் கிழமை முதல் இப்படிவம் விநியோகம் இடம்பெற்று பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளது.

இலங்கை சுதந்திரம் அடைந்து 74 ஆண்டுகள் கடந்து விட்டபோதும் 155 வருடங்களிற்கு | முந்தய சட்டங்களை பின்பற்றியே இலங்கை பொலிஸ் திணைக்களம் செயல்படுகின்றதா என கேள்வி எழுப்பப்படுகின்றது. இதேநேரம் 1865ஆம் ஆண்டின் 76 ஆவது சட்டத்தை மீறினால் உச்ச பட்சமாக 50 ரூபாவே குற்றப்பணம் விதிக்க முடியும் என்றே சட்டத்தில் கூறப்படுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments