முல்லைத்தீவில் ஹம்பகாவினை சேர்ந்த அரச உத்தியோகத்தர் அச்சத்தில் மக்கள்!

You are currently viewing முல்லைத்தீவில் ஹம்பகாவினை சேர்ந்த அரச உத்தியோகத்தர் அச்சத்தில் மக்கள்!

முல்லைத்தீவு தென்னை அபிவிருத்தி அதிகார சபையில் வேலைசெய்யும் ஹம்பகா மாவட்டத்தினை சேர்ந்த பெண் உத்தியோகத்தர் ஒருவர் கடந்த 04 ஆம் திகதி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளார்கள்.
இது தொடர்பில் பொதுசுகாதார பரிசோதகர் மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள்.
அளம்பில் பகுதியில் உள்ள தென்னை அபிவிருத்தி அதிகாரசபையில் பணியாற்றும் ஹம்பகா மாவட்டம் உள்ளிட்ட வடக்கின் வெளிமாவட்டத்தினை சேர்ந்த மூன்று பெண் அரச உத்தியோகத்தர்கள் வாடகை வீடு ஒன்றில் தங்கி வாழ்கின்றார்கள் .இவர்கள் கடந்த 04 ஆம் திகதியே அவர்கள் மாவட்டத்தில் இருந்து வேலைக்கு வந்துள்ளார்கள் இவர்கள் தொடர்பில் பொதுசுகாதார பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் தகவல்கள் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

பகிர்ந்துகொள்ள