முல்லைத்தீவில் 22 வயது யுவதி மாயம்!

You are currently viewing முல்லைத்தீவில் 22 வயது யுவதி மாயம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திருமுறிகண்டி வசந்தநகர் பகுதியில் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக சிறீலங்கா காவற்துறையில் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

22 வயதுடைய குறித்த யுவதி வீட்டில் இருந்து காணாமல் போன போது சிவப்பு நிற சல்வார் அணிந்து சென்றிருக்கிறார்.

சிவகரன் ஜெயலக்சனா என்ற குறித்த யுவதி கடந்த 27.07.2022 முதல் காணாமல் போன நிலையில் சிறீலங்கா காவற்துறையில் முறைப்பாடு செய்தும் இதுவரை யுவதி கண்டுபிடிக்கப்படவில்லை.

யுவதியை கண்டவர்கள் உடன் அருகிலுள்ள சிறீலங்கா காவற்துறைக்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments