முள்ளியவளையில் விக்டர் குழுவினை சேர்ந்த மூன்றாவது நபர் கைது!

You are currently viewing முள்ளியவளையில் விக்டர் குழுவினை சேர்ந்த மூன்றாவது நபர் கைது!

முள்ளியவளை மாமூலைப்பகுதியில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்துள்ள விக்டர்குழு என அறிமுகப்படுத்தப்பட்ட குழுவினைசேர்ந்த இருவரை சிறப்பு அதிரடிப்படையினர் கடந்த காலத்தில் கைதுசெய்துள்ளார்கள்.

இன்னிலையில் 19.09.2020 அன்று அந்த குழுவினை சேர்ந்த மூன்றாவது நபரையும் சிறப்பு அதிரடிப்படையினர் கைதுசெய்து முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்கள்.

குறித்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முள்ளியவளை பொலீசார் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

முள்ளியவளை மாமூலைப்பகுதியினை சேர்ந்த விக்டர் குழு தொடர்பில் தீவிர கண்காணிப்பில் சிறப்பு அதிரடிப்படையினர் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள