முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்தில் குழப்பம்! 

You are currently viewing முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  கூட்டத்தில் குழப்பம்! 

தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவுவேந்தல் நிகழ்வு தொடர்பான கலந்துரையாடலில் குழப்ப நிலை ஏற்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கருத்தினை ஒரு சிலர் ஏற்றுக்கொள்ளாத நிலையில் அரசியல் கலப்படம் வேண்டாம் என கூட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளதுடன் இடையில் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளார்கள்.

கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு சிலர் முள்ளிவாய்க்காலில் 13ஐ கொண்டுவந்து கலக்கவேண்டாம் என குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளார்கள்.

இந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு தொடர்பான கலந்துரையாடல் ஒன்றிற்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.

அதற்கமைய நேற்று மாலை முல்லைத்தீவு வட்டுவாகல் பொதுநோக்கு மண்டபத்தில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கங்களின் பிரதிநிதிகள் பல்கலைக்கழக மாணவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

இதன்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்ததாவது,

“13ஆம் திருத்தச்சட்டத்தினை தீர்வாக ஏற்றுக்கொள்ளமுடியாது இதனை நிராகரிக்கின்ற சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து நினைவேந்தலை முன்னெடுக்க வேண்டும்.

அதற்கான ஆலோசனை கூட்டமாகத்தான் இதனை அறிவித்துள்ளோம் என்றும் இனத்தின் இழப்புக்களையும் தியாகங்களையும் அடகு வைத்துவிட்டு செல்லுகின்றபோது அதனை பார்த்துக்கொண்டிருப்பதும் தவறு அடகு வைப்பதும் தவறு.

நினைவேந்தல் என்பது மக்கள் என்ன நோக்கத்திற்காக உயிர்கொடுத்தார்களோ அவர்களின் நோக்கம் அடையப்படுவதை அல்லது அந்த நோக்கம் குழிதோண்டி புதைப்பதை தடுக்கும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு செயற்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் தலைமை தாங்க வேண்டும் என்று இதில் வர வில்லை தமிழர்களின் நிலைப்பாடுகளில் பிழைகள் விட இயலாது. 13 ஆம் திருத்தம் தமிழ்மக்களுக்கு தீர்வாக கொடுக்கப்பட்டு அது நிராகரித்தபடியால்தான் இத்தனை அழிவுகளையும் நாங்கள் சந்திக்கவேண்டி வந்தது.

13 ஆம் திருத்தத்தினை ஏற்றுக்கொண்டிருந்தால் இனப்படுகொலை நடந்திருக்காது இனப்படுகொலை நடந்த பின்னரும் 13 ஆம் திருத்தத்திற்குள் ஒற்றையாட்சிக்குள் முடக்கும் அரசியல்தான் நடந்துகொண்டு இருக்கின்றது. அதனையும் மூடி மறைத்துக்கொண்டு முள்ளிவாய்க்கால் நிகழ்வினை செய்தால் அர்த்தமற்ற நிகழ்வாகத்தான் இருக்கும்.

முள்ளிவாய்க்கால் நிகழ்வு அரசியலுக்கு அப்பால் பட்டதாக இருக்க வேண்டும்” என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். கலந்துரையாடலின் இறுதியில் ஒரு சிலர் குழப்பதினை ஏற்படுத்தி வெளியேறியுள்ளார்கள் ஏற்கனவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு இருக்கின்ற நிலையில் அதில் உள்ள முக்கியமானவர்கள் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்தில் குழப்பம்!  1
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்தில் குழப்பம்!  2
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments