முள்ளிவாய்க்கால் வாரம்; நான்காம் நாள் நினைவேந்தல்!

You are currently viewing முள்ளிவாய்க்கால் வாரம்; நான்காம் நாள் நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 4ம் நாள் நினைவு நாள் யாழ்ப்பாணம் – குருநகா், புனித யாகப்பர் தேவாலயம் மற்றும் தமிழாராச்சி மாநாட்டு படுகொலை நினைவிடம் ஆகியவற்றில் ஈகை சுடரேற்றப்பட்டு நினைவு கூரப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்நினைவேந்தலில் யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாாி உள்ளிட்ட பொலிஸாா் நினைவேந்தலுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர்.

நினைவேந்தலில் கலந்து கொண்டிருந்தவா்களையும், குறிப்பாக ஊடகவியலாளா்களையும் பொலிஸார் தனித்தனியாக தமது தொலைபேசியில் புகைப்படம் மற்றும் காணொளி பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாய்க்கால் வாரம்; நான்காம் நாள் நினைவேந்தல்! 1





முள்ளிவாய்க்கால் வாரம்; நான்காம் நாள் நினைவேந்தல்! 2
பகிர்ந்துகொள்ள