யாழில் அனுமதியற்ற கடற்தொழில் வலைகளை பயன்படுத்திய 07 பேர் கைது !

You are currently viewing யாழில் அனுமதியற்ற கடற்தொழில் வலைகளை பயன்படுத்திய 07 பேர் கைது !

யாழ்ப்பாணத்தில் அனுமதியற்ற கடற்தொழில் வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த குற்றச்சாட்டில் சிலர் சுண்டிக்குளம் சிறீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – வெற்றிலைக்கேணி  சுண்டிக்குளம் கடற்பகுதியில் அனுமதியற்ற கடற்தொழில் வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 21-38 வயதிற்கு உட்பட்ட 07 பேரையும்  2 டிங்கி படகுகளையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

சுண்டிக்குளம் சிறீலங்கா கடற்படையினர் இவர்களை கைது செய்துள்ளதாக கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் கட்டைக்காடு முள்ளியானை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீரியல்வளத் திணைக்கள அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments