யாழில் உணவகங்களில் இருந்து உணவு உண்ண முடியாது!

You are currently viewing யாழில் உணவகங்களில் இருந்து உணவு உண்ண முடியாது!

யாழ்.மாநகரில் உள்ள உணவகங்களில் அமர்ந்திருந்து உணவருந்துவதற்கு முற்காக தடைவிதிக்குமாறு மாநகர முதல்வர் இமாணுவேல் ஆனல்ட் தொிவித்துள்ளார். 

மாநகர சபையில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் யாழ்.மாவட்டத்தில் கொரோனா மிக மோசமடைவதற்கான 

அறிகுறிகள் காணப்படுகின்றன. யாழ்.மாவட்டத்திற்கு வெளியே இருந்து வருபவர்கள் தொடர்பாக, இன்றும் மத்திய அரசாங்கம் இறுக்கமான நடைமுறைகளை அறிவித்துள்ளது.

யாழ்.மாவட்டத்திற்குள் வெளிமாவட்டத்தில் இருந்து வருபவர்கள் முறையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இல்லாவிடின், 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்குள் உட்படுத்தப்படுவார்கள்.

பகிர்ந்துகொள்ள