யாழில் கஞ்சாவடன் இருவர் கைது.!

You are currently viewing யாழில் கஞ்சாவடன் இருவர் கைது.!

யாழ். – சாவகச்சேரி நகரில் கைமாற்றுவதற்காக கொண்டுவரப்பட்ட 20 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதோடு, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்துக்குக் கிடைத்த இரகசிய தகவலின் பேரிலேயே, இந்தக் கஞ்சா  கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது, திரிகோணமலையைச் சேர்ந்த ஒருவரும், சாவகச்சேரியைச் சேர்ந்த ஒருவருமே  கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களை சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக, மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள