யாழில் கடல் தொழிலுக்கு சென்ற மீனவரை காணவில்லை!

You are currently viewing யாழில்  கடல் தொழிலுக்கு சென்ற மீனவரை காணவில்லை!

யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவர் தொழிலுக்கு சென்ற நிலையில்காணாமல் போயுள்ளதாக பளை சிறீலங்கா காவல்த்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து தேடுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இரண்டு மீனவர்கள் ஒரு படகில் தொழிலுக்கு சென்றுள்ளனர். குறித்த படகு கவிழ்ந்த நிலையில் தொழிலுக்கு சென்ற ஒரு மீனவர் கரை திரும்பியுள்ளார். இந்த நிலையில் மற்றைய மீனவர் இன்னும் கரை திரும்பாத நிலையில் பளை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மீனவருடன் தொழிலுக்கு சென்ற கிறிஸ்தோபர் ஜென்ஸ்போல் என்ற மீனவர் தொழிலுக்கு சென்ற மீனவர்களின் உதவியுடன் கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இவ்வாறான நிலையில் காணாமல் போன மீனவரை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இன்று அதிகாலை 4 மணியளவில் தொழிலுக்கு சென்ற குறித்த மீனவர்கள் பயணித்த படக்கு காற்றினால் கவிழ்ந்துள்ளது. கரை திரும்பிய மீனவர் தனது முயற்சியினால் கவிழ்ந்த படகில் ஏறி அங்கிருந்த மீனவர்களின் உதவியை கோரியுள்ளார். குறித்த மீனவரை தொழிலுக்கு சென்ற ஏனைய கடற்தொழிலாளர்கள் கரைக்கு அழைத்து வந்துள்ளனர். காணாமல் போன மீனவர் கரைக்கு திரும்பாத நிலையில் அவரை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது

பகிர்ந்துகொள்ள