யாழில் குற்றவாளி விக்டர் சுந்தர் மீது வாள்வெட்டு!

You are currently viewing யாழில் குற்றவாளி விக்டர் சுந்தர் மீது வாள்வெட்டு!

யாழ்.மாவட்டத்தில் பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய விக்டர் சுந்தர் என்ற ரவுடி மீது இன்று காலை கல்வியங்காடு பகுதியில் வைத்து வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

சம்பவத்தில் காயமடைந்த ரவுடி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்தச் சம்பவம் இன்று காலை 7 மணியளவில் யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் இடம்பெற்றது

யாழ்ப்பாணம், நாயன்மார்க்கட்டு பகுதியைச் சேர்ந்த விக்டர் சுந்தர், பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று பொலிஸார் தெரிவிக்கப்பட்டது.

அவர் இன்று காலை கல்வியங்காடு பகுதியில் நின்ற போது, மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த மற்றொரு கும்பல், அவர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பித்துள்ளது

பகிர்ந்துகொள்ள