யாழில் பாழடைந்த வீடொன்றிலிருந்து 10 பேர் அதிரடி கைது!

You are currently viewing யாழில் பாழடைந்த வீடொன்றிலிருந்து 10 பேர் அதிரடி கைது!

யாழ்ப்பாண நகரை அண்மித்துள்ள பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் இருந்து 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் கூறியுள்ளனர்.

குறித்த வீட்டில் 10 பேர் கூடி ஊசி மூலம் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக்கொண்டிருந்தபோது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை கடந்த புதன்கிழமை (08-02-2023) இரவு யாழ்ப்பாணம் மூத்த சிறீலங்கா காவற்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் சிறீலங்கா காவற்துறை பரிசோதகர் மேனன் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு சிறீலங்கா காவற்துறை பிரிவினரே முன்னெடுத்தனர்.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை யாழ்.நீதிவான் நீதிமன்றின் கட்டளை பெற்று மறுவாழ்வு முகாமுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments