யாழில் பெருந்தொகை கஞ்சா மீட்பு!

You are currently viewing யாழில் பெருந்தொகை கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணத்தில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

காங்கேசந்துறை கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் காரைநகர் சாம்பலோடை சிவகாமி அம்மன் ஆலய வீதியில் உள்ள பற்றைக்காட்டில் இருந்து 101 கிலோ 750 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அவற்றின் பெறுமதி சுமார் 3 கோடி ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.

மீட்கப்பட்ட கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , சிறீலங்கா காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments