யாழில் பொலீசார் மீது தாக்குதல் 7 பேர் சந்தேகத்தில் கைது!

You are currently viewing யாழில் பொலீசார் மீது தாக்குதல் 7 பேர் சந்தேகத்தில் கைது!

யாழ்ப்பாணம் பருதித்தித்துறை பகுதியில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருதித்தித்துறை புனிதநகர் பகுதியைச் சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையிலான மோதல் நேற்று பருதித்தித்துறை நகர் வரை நகர்ந்தது.

மோதல் இடம்பெற்ற பகுதிக்கு சிவில் உடையில் சென்ற பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் பொலிஸார் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், சந்தேகத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

மேலதிக விசாரணைகளை பருதித்துறைப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர

பகிர்ந்துகொள்ள