யாழில். மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்ற குற்றத்தில் இளைஞன் கைது!

You are currently viewing யாழில். மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்ற குற்றத்தில் இளைஞன் கைது!

யாழ்ப்பாணத்தில் மாணவர்களுக்கு, போதை பாக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் சிறீலங்கா காவற்துறை பிரிவுக்கு ட்பட்ட  கல்வியங்காடு பகுதியில் இளைஞன் ஒருவர் மாணவர்களுக்கு மாவா போதை பாக்கு விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞனை கைது செய்தனர்.

கைது செய்த இளைஞனை சோதனையிட்ட போது, அவரது உடமையில் இருந்து, சுமார் 07 கிலோ மாவா பாக்கினை மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை கோப்பாய் சிறீலங்கா காவற்துறை நிலையத்தில் தடுத்து வைத்து சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments