யாழில் 33 பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் !

You are currently viewing யாழில் 33 பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் !

யாழில் 33 பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் ! 1

 

 

 

 

 

 

யாழ்ப்பாணத்திற்கு கடந்த மாதம் சிறீலங்கா  ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டு, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போது,  33 பாதுகாப்பு அற்ற கடவைகளையும் பாதுகாப்பான கடவைகளாக மாற்றம் செய்வது  தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த வருடத்திற்குள் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் , புகையிரத திணைக்களத்திடம் மதிப்பீட்டு அறிக்கைகளும் சிறீலங்கா  ஜனாதிபதியால் கோரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது .

ஒரு மாத காலம் கடந்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

கடந்த வாரம் இணுவில் பகுதியில் வான் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் வானில் பயணித்த மூன்று மாத குழந்தையும் , தந்தையும் உயிரிழந்த நிலையில் தாய் படுகாயமடைந்து   யாழ், போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த விபத்தினை அடுத்து இரண்டு நாட்கள் ஊர் மக்கள்  புகையிரத்தை தடுத்து நிறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments