யாழ்ப்பாணத்தில் நேற்று 21 பேருக்கு தொற்று!- 800 மாதிரிகளின் முடிவுக்காக காத்திருப்பு!

You are currently viewing யாழ்ப்பாணத்தில் நேற்று 21 பேருக்கு தொற்று!- 800 மாதிரிகளின் முடிவுக்காக காத்திருப்பு!

யாழ்ப்பாணத்தில் 21 பேருக்கும் வவுனியா, முல்லைத்தீவில் தலா 2 பேருக்கும் கிளிநொச்சியில் ஒருவருக்கும் என நேற்று 26 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 104 பேரின் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் 8 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

திருநெல்வேலி பொதுச் சந்தை தொகுதி கடைகளின் வியாபாரிகள் மற்றும் பணியாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 4 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் நேரடித் தொடர்புடைய மூவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 3 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சாவகச்சேரி, பருத்தித்துறை வைத்தியசாலைகளின் தனிமைப்படுத்தல் விடுதிகளில் நோய் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணம் மாநகர கடைத் தொகுதியில் நேற்றுமுன்தினம் பெறப்பட்ட 800ற்கு மேற்பட்டோரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள