யாழ்ப்பாணத்தில் மேலும் 6 பேர் கொவிட்-19 தொற்றினால் நேற்று உயிரிழந்துள்ளனர்!

You are currently viewing யாழ்ப்பாணத்தில் மேலும் 6 பேர் கொவிட்-19 தொற்றினால் நேற்று உயிரிழந்துள்ளனர்!

யாழ்ப்பாணத்தில் மேலும் 6 பேர் கொவிட்-19 தொற்றினால் நேற்று உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆனைக்கோட்டையைச் சேர்ந்த 89 வயதுடைய பெண் ஒருவரும் யாழ்ப்பாணம் அரசடி வீதியைச் சேர்ந்த 79 வயதுடைய ஆண் ஒருவரும் முல்லைத்தீவைச் சேர்ந்த 33 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்தனர்.

அச்சுவேலியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவர் வீட்டில் உயிரிழந்தார் என்று கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை தெரிவித்தது.

இதேவேளை, மந்திகை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 34 வயதுடைய பெண் ஒருவர் உள்பட இருவர் நேற்று உயிரிழந்தனர் .

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 231ஆக உயர்வடைந்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments