யாழ்ப்பாணத்தில் வரட்சியால் 70 ஆயிரம் பேர் பாதிப்பு!

You are currently viewing யாழ்ப்பாணத்தில் வரட்சியால் 70 ஆயிரம் பேர் பாதிப்பு!

வரட்சியான காலநிலை காரணமாக 04 மாகாணங்களில் சுமார் 90,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ, கிழக்கு, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 18 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

27,885 குடும்பங்களைச் சேர்ந்த 89,485 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், யாழ்ப்பாண மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளில் 21,714 குடும்பங்களைச் சேர்ந்த 69,113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சப்ரகமுவ மாகாணத்தில் 1,098 குடும்பங்களைச் சேர்ந்த 5,734 பேரும், வடமேல் மாகாணத்தில் 1,726 குடும்பங்களைச் சேர்ந்த 5,655 பேரும், கிழக்கு மாகாணத்தில் 2,747 குடும்பங்களைச் சேர்ந்த 8,983 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments