யாழ்ப்பாணத்தில் வெள்ளம் ஏற்படுத்திய அழிவு!

You are currently viewing யாழ்ப்பாணத்தில் வெள்ளம் ஏற்படுத்திய அழிவு!

புரெவி புயல் தாக்கத்தினால் நேற்று இரவு 10 மணி வரையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 45 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் தற்போதுவரை 13 ஆயிரத்து 707 குடும்பங்களைச் சேர்ந்த 45 ஆயிரத்து 318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ். மாவட்டத்தில் தற்போது 34 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு ஆயிரத்து 167 குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்து 927 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கடும் காற்றினால் 48 வீடுகள் முழுமையாகவும், ஆயிரத்து 963 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. குறிப்பாக, யாழ். மாவட்டத்தில் பருத்தித்துறை, சண்டிலிப்பாய் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளவர்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சூரியராஜா தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள