யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் வீடொன்றின் மீது தாக்குதல்!

  • Post author:
You are currently viewing யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் வீடொன்றின் மீது தாக்குதல்!

அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் மூவர் மாத்திரம் வசித்து வந்த நிலையில், நேற்று (சனிக்கிழமை) இரவு ஒன்பது மணியளவில் திடீரென உட்புகுந்த கும்பல் வீட்டின் கண்ணாடிகள், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் என்பவற்றை உடைத்து சேதப்படுத்தி தப்பிச் சென்றுள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர்கள் கன்டர் ரக வாகனத்தில் வந்து குறித்த தாக்குதலை மேற்கொண்டதாக வீட்டில் உள்ளவர்கள் குறிப்பிட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக அச்சுவேலிப் சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள