யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

You are currently viewing யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

 

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் நேற்று (03) இரவு ஒரு தொகை கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மண்டைதீவு பகுதியைச் சேர்ந்த 32 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய யாழ்ப்பாண காவல் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.சுபசிங்க தலைமையிலான குழு கைது நடவடிக்கையை முன்னெடுத்தது.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 765 கிராம் கஞ்சா காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளுக்காக சந்தேக நபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments