யாழ்ராணி மோதி ரிப்பர் சாரதி பலி!

You are currently viewing யாழ்ராணி மோதி ரிப்பர் சாரதி பலி!

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் ரயில் மோதி இளம் குடும்பஸ்தர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்ராணி ரயில் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் முறிகண்டி பகுதியை சேர்ந்த 43 வயதுடைய கேதீஸ்வரன் விஜயானந்தன் எனும் 2 பிள்ளைகளின் தந்தையான ரிப்பர் சாரதியே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் உயிரிழந்த நபரின் சடலம் கிளிநொச்சி ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் குறித்த சடலம் ரயில் நிலைய அதிகாரிகளால் கிளிநொச்சி வைத்தியசாலையிடம் ஒப்படைக்கப்பட்டது.

பொலிஸ் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்படவுள்ளதாக ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments