யாழ் இளைஞர்களில் இருவரில் ஒருவர் சடலாமாக மீட்பு!

You are currently viewing யாழ் இளைஞர்களில் இருவரில் ஒருவர் சடலாமாக மீட்பு!

திருகோணமலை- நிலாவெளி கடலில் நீராடச் சென்ற இளைஞர்களில் இருவர் காணாமல் போயிருந்த நிலையில், ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (12) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் -வலிகாமம் தெற்கு பிரதேசத்திலுள்ள குப்பிளான் பகுதியைச் சேர்ந்த நவரஞ்சன் கௌதமன் (21வயது) என்பவர் உயிரிழந்துள்ளதாகவும், சிவச்சந்திரராசா சிந்துஜன் (21வயது) என்பவர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

சிவராத்திரி தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் நண்பர்கள் சிலர் வருகை தந்ததாகவும்,

சமய வழிபாடுகளை முடித்து விட்டு வீட்டுக்குச் செல்வதற்கு முன்னர் நிலாவெளி கடற்கரை பகுதிக்கு நீராடச் சென்றபோது இருவர் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டதாகவும்,

இதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றைவர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள